உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை! - வித்யா கொலை வழக்கு.
பிரதிவாதிகளில் ஒருவர் உயிரிழந்து விட்டமையும் குறிப்பிடத்தக்கது.
2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு விதித்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (06) உறுதி செய்தது.
தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேனா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து விடுதலை கோரி பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேல்முறையீடுகளை விசாரித்து தள்ளுபடி செய்த பின்னர் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
இருப்பினும், குறித்த வழக்கில் ஏனைய இரண்டு பிரதிவாதிகளின் தண்டனைகளை இரத்து செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பிரதிவாதிகள் ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
2015 ஆம் ஆண்டு மே மாதம் யாழ்ப்பாணத்தின் புங்குடுதீவுப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி பயின்ற 18 வயது சிறுமியான சிவலோகநாதன் வித்யாவைக் கடத்தி, கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்ததாகக் குற்றம் சாட்டி, சுவிஸ் குமார் மற்றும் ஒரு குழுவினர் மீது சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அந்த வழக்கில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட ஏழு பிரதிவாதிகளுக்கு 2017-ஆம் ஆண்டில் மரண தண்டனை விதித்தது.
இந்த பிரதிவாதிகள், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து விடுதலை அளிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்திருந்தனர்.இந்த மேல்முறையீட்டு விசாரணையின் போது பிரதிவாதிகளில் ஒருவர் உயிரிழந்து விட்டமையும் குறிப்பிடத்தக்கது.


