மியன்மாரில் நிலநடுக்கம் ; பாங்கொக்கில் அவசரகால நிலை பிரகடனம்
.

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து தாய்லாந்தின் பாங்கொக் நகரில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் தாய்லாந்தின் பாங்கொக் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பாங்கொக்கில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில் இன்று (28) 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேவேளை இந்த நிலநடுக்கமானது தாய்லாந்து மற்றும் வியட்நாம் வரை உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பீதியில் தெருக்களில் ஓடும் மக்கள்.
மியான்மரின் மத்திய பகுதியில் இன்று காலை (28) 7.7 மற்றும் 6.4 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில் மக்கள் அச்சமடைந்து அலறியடித்து ஓடிய காணொளிகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, தலைநகர் நேபிடாவிலிருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள சாகைங் நகரிலிருந்து 16 மற்றும் 18 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. தாய்லாந்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கூட நிலநடுக்கம் உணரப்பட்டது.