Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உள்நாடா? வெளிநாடா? தேர்தல் புறக்கணிப்புச் செய்திகளை இருட்டடிப்புச் செய்யத் தூண்டுகின்றன!

“இலங்கை அரசாங்கம் தமிழர் தாயகத்தை எதிரிகளாகப் பார்க்கிறது”


 

எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவேறும் வரை வாக்களிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. 

'இலங்கை அரசாங்கம் தமிழர் தாயகத்தை எதிரிகளாகப் பார்க்கிறது' என்று அவர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 'தாயகத்தில் அவர்கள் புத்தமயமாக்கல்இ இராணுவமயமாக்கல் மற்றும் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலைகளை தொடர்கின்றனர். பெரும்பான்மைப் பிரதிநிதித்துவம் அவர்களின் கைகளில் இருக்கும் வரை தமிழர்களை எதிரிகளாகக் கருதாமல், தங்கள் மக்களாகக் கருத மாட்டார்கள்.

'ஜனாதிபதித் தேர்தலை நிராகரிப்பதே தமிழ் மக்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே தெரிவு' என (TNPF) தெரிவித்துள்ளது.

தேர்தலைப் புறக்கணிப்பதுஇ தமிழர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவதில்லை என்ற தெளிவான செய்தியை அரசுக்கு அனுப்பும் என்று அக்கட்சி வலியுறுத்தியது.

(TNPF) பொருளாதார நெருக்கடி மற்றும் தமிழர்கள் மீதான அதன் தாக்கம் பற்றி பேசுகிறதுஇ இலங்கை அரசாங்கம் தனது சம்பள வரவு செலவுத் திட்டத்தில் கிட்டத்தட்ட 48மூ பாதுகாப்புப் பணியாளர்களுக்கு ஆயுத மோதல்கள் இல்லாத நிலையிலும் ஒதுக்குகிறது என்று குறிப்பிட்டது.

'பாதுகாப்புப் படைகள் இந்த பொருளாதாரத்தில் பெரும் சுமையாக இருக்கின்றனஇ ஆனால் அவர்கள் அதை ஏற்க விரும்பவில்லை' என்று அவர்களின் அறிக்கை வாசிக்கிறது.

'தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு இல்லாத நிலையில்இ தமிழர்கள் வீதியில் இறங்கும் போதெல்லாம்இ பாதுகாப்புப் படையினரின் கடும் எதிர்ப்பைச் சந்திக்கின்றனர். இந்த விகிதத்தில்இ தமிழர்களுக்கான பாதுகாப்புப் படைகளை தொடர்ந்தும் நிறுத்தினால்இ பாதுகாப்புச் செலவினங்களைக் குறைக்க முடியாது.'

தீவின் இன மோதலுக்கு இரண்டு பாதைகள் எஞ்சியுள்ளன என்று (TNPF) கூறியது. அதில் ஒன்றுஇ தமிழர்களை மௌனமாக்குவதும்இ அரசியல் தீர்வுக்கான தேடலை கைவிடச் செய்வதும்இ மற்றையது நிலவும் சூழலுக்கு நேர்மையாக இருந்து நிரந்தர அரசியல் தீர்வை வழங்குவது.

தேர்தல் புறக்கணிப்புப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல இடங்களிலும் நடந்துகொண்டிருக்கிறது.ஆனால் பொது வேட்பாளர் பற்றியும், சிங்கள வேட்பாளர்களில் யாருக்கு வாக்களிப்பது என்பன பற்றிய செய்திகளே ஊ டகங்களில் காணப்படுகின்றன. ஏன் இந்தப் பாகுபாடு. புறக்கணிப்புப் பற்றிய செய்திகள்; மக்களைச் சென்று அடையக் கூடாது என்பதில் செய்தி நிறுவனங்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகின்றனவா?அல்லது ஊடகங்களை யாராவது புறக்கணிப்புச் செய்திகளைப போடாமல் தடுக்கின்றார்களா? உள்நாடா? வெளிநாடா? இவ்வாறு புறக்கணிப்புச் செய்திகளை இருட்டடிப்புச் செய்யத் தூண்டுகின்றன.