Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

வடக்கு, கிழக்கில் கலந்தாய்வு நடத்தும் இந்தியா: ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் யாரை ஆதரிக்க வேண்டும்?

.

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தரப்புகளின் நிலைப்பாடுகள் தொடர்பில் அறிந்துகொள்ளும் நோக்கில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் முதல் கட்டமாக கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் இந்தியா கவலையான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இதனை நேரடியாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்திய தரப்பு எடுத்துரைத்துள்ளது.

அதனால் இலங்கை தமிழரசுக் கட்சி பொறுத்தமான ஒரு தீர்மானத்தை எடுக்கும் சூழ்நிலையை உருவாக்கும் முயற்சிகளில் சந்தோஷ் ஜா, ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதன் ஒரு கட்டமாக கிழக்கு மாகாண பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினரை சந்தோஷ் ஜா, சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது சமகால அரசியல், ஜனாதிபதித் தேர்தல், தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினைகள், அரசியல் சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் யாரை ஆதரிக்க வேண்டுமென சூட்சமான முறையில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தாக தெரியவருகிறது.