Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழ் பொது வேட்பாளர் மிகவும் மோசமான தோல்வியை சந்திப்பார்: முட்டாள்த்தனமான முடிவு என்கிறார் சுமந்திரன்

.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தரப்பில் பொதுவேட்பாளரை நிறுத்தியுள்ளமை முட்டாள்தனமான முடிவு என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் குறிப்பிட்டுள்ளதாவது: ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதை ஏற்க முடியாது.

இது முட்டாள்தனமான முடிவு.தமிழர் பிரச்சினையை பலவீனப்படுத்தும் செயலே இது.

தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் ஒரு செய்தியை வெளிப்படுத்துவதற்கான தேர்தல் இதுவல்ல. மாறாக சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்புமல்ல.

இவ்வாறு அவர் தனது X தள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அண்மையில் தொலைக்காட்சி நேர்காணலிலும் இதுபற்றி சுமந்திரம் எம்.பி. கருத்து வௌியிட்டிருந்தார்.தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் தோல்வியடைவார்.தமிழ் பொது வேட்பாளர் மிகவும் மோசமான தோல்வியை சந்திக்க நேரிடுவதால், இதுவொரு முட்டாள்தனமான முடிவு. இதை, வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களுடன் இலங்கை தமிழரசுக்கட்சி பேசியுள்ள தாகவும்,விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் சுமந்திரன் எம்.பி.தெரிவித்திருந்தார்.