Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தற்கொலை குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஐந்து பேர் பலி, மீண்டும் பலூச் போராளிகள் தாக்குதல்.

.

பலுசிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஐந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஈரானிய எல்லைக்கு அருகே தஃப்தான் நோக்கிச் சென்ற பாகிஸ்தான் ராணுவத்தின் ஏழு பேருந்துகளின் கான்வாயை இந்த தாக்குதல் குறிவைத்தது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு கார் நோஷ்கியில் உள்ள பேருந்துகளில் ஒன்றில் மோதியதால் கணிசமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. பலூச் விடுதலை இராணுவம் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இது அதன் தற்கொலைத் தாக்குதல் பிரிவால் நடத்தப்பட்டதாகக் கூறியது. சமீபத்தில் 450 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் ரயில் மீது தாக்குதல் நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

தனிநாடு கோரி போராட்டம்.  பலுசிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறை, அங்கு ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராளி குழுக்களின் மீது கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தான் அரசு மாகாணத்தின் இயற்கை வளங்களை சுரண்டுவதாக போராளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தங்கள் மண்ணை விட்டு பாகிஸ்தானை வெளியேறும்படியும், தனி பலுசிஸ்தான் சுதந்திர நாட்டை உருவாக்கும் முனைப்புடனும் அவர்கள் போராடி வருகின்றனர். இதற்கிடையில், சனிக்கிழமை நடந்த ஒரு தனி தாக்குதலில், பாகிஸ்தான் தலிபான்களின் தாக்குதல் அதிகரித்து வரும் மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் மூன்று பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். 2021 ஆம் ஆண்டு காபூலில் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பாகிஸ்தானின் மேற்குப்