Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சஜித்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் முடிவு: பின்புலத்தில் இந்தியா?

.

இலங்கை தமிழரசுக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

என்றாலும், இந்த முடிவு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் தனிப்பட்ட தீர்மானத்தில் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதுடன், அக்கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சிவஞானம் சீறிதரன், இத்தீர்மானத்துக்கு எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் இந்த தீர்மானத்தின் பின்னால் இந்தியா இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென தடுமாற்றத்தில் இருந்த தமிழரசுக் கட்சி, அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்திருந்தது.

இந்தச் சந்திப்பில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது பொறுத்தமாக இருக்குமென்பதை அஜித் தோவல் மறைமுகமாக தெளிவுப்படுத்தியுள்ளார். இதன் பின்னரே சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தீர்மானத்தை தமிழரசுக் கட்சி எடுத்தது.

ஆனால், இத்தீர்மானம் குறித்து கட்சியில் பல்வேறு மாறுபட்ட நிலைப்பாடுகள் தொடர்ந்து நிலவி வருகிறது. குறிப்பாக தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதே பொறுத்தமாக அமையும் என சீறிதரன் உள்ளிட்ட சிலர் கூறிவருகின்றனர்.

என்றாலும், இத்தேர்தலில் தமிழர்கள் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளதால் தமிழரசுக் கட்சியின் முடிவு சாணக்கியமானது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

பல்வேறு கருத்து மாறுபாடுகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுக்க இந்தியாவின் அழுத்தம் கடுமையாக இருந்துள்ளதுடன், சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுக்கும் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிராத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இருந்து சில அழைப்புகள் சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது.