Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

கிளிநொச்சி சந்திரன் பூங்காவை ஆக்கிரமித்து முகாமிட்ட இலங்கை இராணுவம்; கெடுபிடிகளுக்கு மத்தியில் தொடர்ந்த போராட்டம்.

பூங்கைவை விட்டு இராணுவத்தினர் வெளியேறுமாறு கோரி ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ், கட்சி ஆதரவாளர்களுடன் பொது மக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கிளிநொச்சி சந்திரன் பூங்காவை ஆக்கிரமித்து முகாமிட்ட இலங்கை இராணுவம்; கெடுபிடிகளுக்கு மத்தியில் தொடர்ந்த போராட்டம்.

கிளிநொச்சி – சந்திரன் பூங்காவை இராணுவம் வெளியேறுமாறு கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பாதுகாப்பு படையினரது கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்று செவ்வாய்கிழமை(21) போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி மண்ணின் சொத்தான சந்திரன் பூங்காவை இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்து முகாமிட்டுள்ளனர்.

எனவே பூங்கைவை விட்டு இராணுவத்தினர் வெளியேறுமாறு கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ் தலைமையிலான கட்சி ஆதரவாளர்களுடன் பொது மக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தனர். எனினும், பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் போராட்காரர்கள் சுமார் 2 மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.