Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரணிலைவிட மஹிந்தவே பெரிய “கேம் மாஸ்டர்“: அவர்களது எண்ணம் நிறைவேறாது

.

 

உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று வியாழக்கிழமை (11.07.24) நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகிறது. இந்த விவாதத்தில் தொடர்ந்து உரையாந்நிய அனுரகுமார திசாநாயக்க,

ஜனாதிபதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், ஜனாதிபதி தேர்தல் குறித்த காலப்பகுதியில் நடத்தப்படும்.

ரணில் விக்கிரமசிங்க அரசியல் விளையாட்டுகளை விளையாடுவதற்கு சாதுரியமானவராக அறியப்பட்டவர். கடந்த 30 ஆண்டுகளாக தனது அரசியல் வாழ்க்கையில் இதைத்தான் செய்து வருகிறார். எனினும், அவரது அரசியல் விளையாட்டுகள் அவரது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மாத்திரமே பலனளிக்கிறன.

அவரது அரசியல் விளையாட்டுக்களால் இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியால் நாடாளுமன்றத்தில் ஓர் ஆசனங்களைப் பெற முடியாமல் போனது.

ஆனால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இவ்வாறான அரசியல் விளையாட்டுக்களை விளையாடுவதில் மூளையாக செயற்படுபவர்.

மஹிந்த ராஜபக்ச பல அரசியல் கட்சிகளை அழித்துள்ளதுடன், பல கட்சிகளுடன் கைக்கோர்த்துள்ளார். தன்னைக் கொலை செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் நட்பாக பழகும் திறனுடையவர். அவர் ரணில் விக்கிரமசிங்கவை விடவும் பெரிய விளையட்டு வீரர்.” என்றார்.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் இந்த முயற்சிகள் எதுவும் வெற்றிபெறாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.