Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

O/L தமிழ் பரீட்சை எழுதச் சென்ற 88 வயது பாட்டி

,

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் இறுதி நாளான இன்று (26) காலை தமிழ் மொழி பரீட்சையை எழுத தயாராகிய மிஸலின் நோனா பற்றியதே இந்த விடயம்.

இன்று (26) காலை வீட்டை விட்டு வெளியேறிய அவர், ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியராவார். 40 வருடங்களாக பல பாடசாலைகளில் கற்பித்துள்ளார்.

களுத்துறை பகுதியைச் சேர்ந்த இந்த ஓய்வுபெற்ற ஆசிரியை தனது 20 ஆவது வயதில் ஆசிரியர் நியமனத்தைப் பெற்றுள்ளார். 1957 ஆம் ஆண்டு கண்டியின் மடுகல்லையில் தனது ஆசிரிய பயணத்தை ஆரம்பித்த அவர் தற்போது ஓய்வு பெற்று 30 வருடங்களாகிறது. வீட்டு வேலைகளை பார்த்தவாறு நன்றாக வாழ்ந்து வருகிறார்.

தையல் மற்றும் பின்னல் கலைகளில் திறமையான அவர், பின்னல் பொருட்களை உருவாக்குவதில் மிக திறமையானவராக காணப்படுகின்றார்.

தமிழ் மொழியை கற்பதற்காக ஆசிரியர் ஒருவரின் உதவி நாடிச் செல்லாத அவர், புத்தகங்களை வாங்கி வந்து தமிழ் மொழியை கற்றுள்ளார். இதற்கு அவருடைய மகள் பெரிதும் உதவியுள்ளார்.

இன்று நடைபெற்றம் சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் மொழி தமிழ் மொழிப் பாடத்தில் உயர் சித்தியைப் பெறுவதே அவருடைய எதிர்பார்ப்பாகும். மிஸலின் நோனாவின் ஒரேயொரு குறிக்கோள், தான் இறக்கும் வரை கற்றுக்கொள்வதுதான் என்று அவர் கூறுகிறார்.

அதற்கமைய, இலங்கையில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதிய மிக வயதான பெண்மணி என்ற சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள மிஸலின் நோனாவின் எதிர்பார்ப்பு நிறைவேற வாழ்த்துகள்.