Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

தேர்தல்களை எதிர்கொள்ளத் தயார்: தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு கூட்டம்

.

வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு கூட்டம் இன்று இடம்பெற்றது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.

இதன் போது, ஜனாதிபதி தேர்தலை, தமிழீழ விடுதலை இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது என்பது தொடர்பாகவும், வருகின்ற நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், கட்சியின் ஊடக பேச்சாளர் சுரேன் குருசாமி, கட்சியின் தேசிய அமைப்பாளர் பிரசன்னா மற்றும் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.