Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

விமர்சனங்களுக்கு தரமான பதிலடி. அப்படித்தான் வாழ வேண்டுமென எந்த அவசியமும் இல்லை.. ஜிவி பிரகாஷ்.

எனக்குள் ஒரு தராசு இருக்கிறது. அந்தத் தராசை வைத்து சரி, தவறை நான் முடிவு செய்வேன்"

ஜிவி பிரகாஷ் இப்போது குட் பேட் அக்லி படத்துக்கு இசையமைத்திருக்கிறார். மேலும் அன்பறிவ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்துக்கும் அவர்தான் இசை என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே ஹீரோவாகவும் கலக்கிவரும் அவர் தற்போது கிங்ஸ்டன் படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் அந்தப் படம் ரிலீஸாகவிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். முதல் படத்திலிருந்தே தரமான இசையை கொடுத்துவரும் அவர் சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருதையும் வென்றார். அந்தப் படத்தின் மெகா ஹிட்டுக்கு ஜிவியின் இசையும் முக்கியமான காரணங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்துக்காக அவர் தேசிய விருது வென்றத்தை அனைத்து இசையமைப்பாளர்களின் ரசிகர்களும் கொண்டாடினார்கள். அந்த அளவுக்கு ஜிவிக்கு ஹேட்டர்ஸ் குறைவாகவே இருக்கிறார்கள்.

இசையமைப்பதில் பீக்கில் இருந்த பிரகாஷ் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார். டார்லிங் படத்தில் ஹீரோவாக களமிறங்கிய அவர் தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, சர்வம் தாளமயம், நாச்சியார், சிகப்பு மஞ்சள் பச்சை, பென்சில், பேச்சிலர் என ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டார். ஆனால் இவற்றில் சில படங்கள் மட்டுமே அவருக்கு நடிகராக நல்ல பெயரையும், ஹிட் படங்களாகவும் அமைந்திருக்கின்றன. இருப்பினும் நடிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டுகிறார் ஜிவி.

மீண்டும் ஃபார்மில்: ஹீரோவாக நடிப்பது ஒருபக்கம் இருந்தாலும் தொடர்ந்து அதிக படங்களுக்கு அவர் இசையமைக்க வேண்டுமென்பதுதான் ரசிகர்களின் பேராவலாக இருந்தது. அதனை கவனித்த ஜிவி மீண்டும் இசையமைப்பதில் பிஸியாகியிருக்கிறார். அந்தவகையில் அசுரன், அமரன், லக்கி பாஸ்கர், குட் பேட் அக்லி, பராசக்தி என ஃபார்முக்கு வந்திருக்கிறார். சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தின் டீசரில் ஜிவி பிரகாஷின் இசையை கேட்ட ரசிகர்கள் பிரமிப்பில் வாயடைத்து போயிருக்கின்றனர். அந்த அளவுக்கு செம இசையை கொடுத்திருக்கிறார்.

இதற்கிடையே பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் கடந்த வருடம் பிரிவதாக அறிவித்தார். எப்படியாவது அவர்கள் இரண்டு பேரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என ஜிவியின் குடும்பத்தினர் மட்டுமின்றி ரசிகர்களுமே காத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பை காலம் வழங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பெர்சனல் வாழ்க்கையில் இருவரும் பிரிந்தாலும் இசை ரீதியாக நட்பாகத்தான் இருக்கிறார்கள். இசை கச்சேரியிலும் இணைந்து பயணிக்கிறார்கள்.

அவர் இப்போது கிங்ஸ்டன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அப்படம் விரைவில் ரிலீஸாகவிருப்பதால் அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது ரியல் லைஃப் கேரக்டர் குறித்து பேசியிருக்கிறார். அவர் அளித்த அந்தப் பேட்டியில், "நான் மற்றவர்களுக்காக வாழ முடியாது. அடுத்தவர்களை இம்ப்ரெஸ் செய்ய வேண்டும் என்று வாழ்ந்தால் நான் எத்தனை நாட்கள் அப்படியே வாழ முடியும்.

என்னைப் பற்றி அவர் என்ன நினைப்பார், இவர் என்ன நினைப்பார் என்றெல்லாம் நான் நினைக்கமாட்டேன். எனக்கு தோன்றுவதை நான் செய்வேன். அடுத்தவர்களுக்காக நான் வாழ வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. எனக்குள் ஒரு தராசு இருக்கிறது. அந்தத் தராசை வைத்து சரி அல்லது தவறை நான் முடிவு செய்வேன்" என்றார்.