Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது.

உயிர்த்த குண்டு தாக்குதல் சம்பவம் : சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று ஆரம்பம்

உயிர்த்த குண்டு தாக்குதல் சம்பவம் : சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று ஆரம்பம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது.

இன்று புதன்கிழமை காலை 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரையான காலப் பகுதியில் குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு,நஞ்சு வகைகள், அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் பற்றிய கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதனை தொடர்ந்து காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

நாளை வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரையான காலப் பகுதியில் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 22338\39 ஆம் இலக்க வர்த்தமானி மற்றும் 2352\29 ஆம் இலக்க வர்த்தமானி ஆகியவற்றில் வெளியிடப்பட்ட இரண்டு ஒழுங்குவிதிகள்,மதுவரிச் சட்டத்தின் கீழ் 2361\44 இலக்க வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட அறிவித்தல்,குடிவருவோர் குடியகல்வோர் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதிக்கப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணி வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான இரண்டாவது நாள் விவாதம் இடம்பெறவுள்ளது.

வெள்ளிக்கிழமை (26) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தின் மூன்றாவது நாள் விவாதம் இடம்பெறவுள்ளது.