Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஐனாதிபதி தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் பொருத்தமான வேட்பாளர் ஒருவரை முன்வைக்க முடியாமல் போனால், அதற்குத் தான் முன்னிலையாவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்த போதிலும் ஷிரந்தி ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு

.

இலங்கையில் வீதி போக்குவரத்து விபத்துக்களின் அதிகரிப்பை கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வீதி விபத்துக்களில் 1,154 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் மொத்தம் 11,727 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதிகளின் தவறான அணுகுமுறையே வீதி விபத்துக்களுக்கு பிரதான காரணம் என வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் ரோஹன அஜித் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை விபத்துகளுக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மோசமாகப் பராமரிக்கப்படும் சாலைகள், போதிய பலகைகள் மற்றும் சரியான விளக்குகள் இல்லாததும் பிரச்சினையை மேலும் மோசமாக்குகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற காரணிகளும் குறிப்பிடத்தக்க பங்களிப்பதாக அடையாளம் காணப்படுள்ளன.

குறிப்பாக அலைபேசி பயன்பாடு, போதிய ஓட்டுநர் பயிற்சி, பாதசாரிகளின் கவனக்குறைவு, மோசமான வானிலை மற்றும் மோசமான பொதுப் போக்குவரத்து நிர்வாகம் ஆகியவை அதிகரித்து வரும் விபத்து விகிதங்களில் கணிசமான பங்கு வகிக்கிறது.

“வீதி விபத்துகளின் தாக்கம் உடனடி உயிர் இழப்புகளுக்கு அப்பால், பல குடும்பங்களுக்கு நிதி உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும்.

காயமடைந்தவர்கள் நீண்டகால மருத்துவ பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு தேவைகளுடன் போராட வேண்டியுள்ளது. உயிரிழந்தவர்களில் இளைஞர்களும் பாடசாலை மாணவர்களும் அடங்குவர்.

வீதி போக்குவரத்து விபத்துக்களினால் ஏற்படும் சிகிச்சைச் செலவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12,000 பேர் விபத்துகளால் இறக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். விபத்தில் உயிர் பிழைப்பவர்கள் ஊனமுற்றோராகி கூடுதல் சுமையாக உள்ளனர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், வீதி விபத்துகளின் அதிகரிப்பை எதிர்த்துப் போராட, ஒரு விரிவான அணுகுமுறை அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முறையான அடையாளங்கள், விளக்குகள் மற்றும் பாதசாரிகள் கடக்கும் பாதைகளுடன் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும் பராமரிப்பதும் மிக முக்கியமானது எனவும்வலியுறுத்தப்பட்டுள்ளது.