Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ராஜபக்சக்களுடன் ரணில் கூட்டணி அமைக்க வேண்டுமா?: வெளியானது பொது மக்களின் கருத்துக்கணிப்பு

.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சக்களுடன் கூட்டுச் சேரக் கூடாது என நாட்டின் பெரும்பாலானா வாக்களர்கள் தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

டெய்லி மிரர் (Dailymirror) நடத்திய கருத்துகணிப்பில் 76 வீதமானவர்கள் ராஜபக்சக்களுடன் கூட்டு சேரக் கூடாது என தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகணிப்பில் பங்கெடுத்தவர்களில் 76 வீதமானவர்கள் கூட்டுச்சேர கூடாது என தெரிவித்துள்ளதுடன், 21 வீதமானவர்கள் அவ்வாறு செய்வது சரியெனவும் பதிலளித்துள்ளனர்.

எவ்வாறாயினும், மூன்று வீதமானவர்கள் தெரியாது என பதிலளித்துள்ளதாகவும் அந்தக் கருத்துகணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கொழும்பு அரசியல் மிகவும் பரபரப்படைந்துள்ளது.

ஒவ்வொரு தரப்பினர்களையும் வளைத்துப் போடும் முயற்சியில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பலர் கட்சி தாவல்களிலும் ஈபட்டுள்ளனர்.

இவ்வாறானா பின்னணியில், ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி ரணிலுடன் இணைந்துள்ளனர்.

இதுவொருபுறமிருக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலும் பிளவு ஏற்பட்டுள்ளதுடன், அதன் முக்கிய உறுப்பினர்கள் ரணில் பக்கம் செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், அந்தக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுன் ஏற்பட்ட உட்பூசலை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் சுயேற்சையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.