Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தெஹிவளையில் துப்பாக்சி சூடு – ஒருவர் பலி; 48 மணி நேரத்தில் ஐந்தாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

.

தெஹிவளையில் துப்பாக்சி சூடு – ஒருவர் பலி: 48 மணி நேரத்தில் ஐந்தாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

தெஹிவளையில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கடவத்த வீதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இதில் 45 வயதுடைய ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த 48 மணித்தியாலங்களில் நான்கு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அவற்றில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதுடன், தெஹிவளையில் ஹோட்டல் உரிமையாளரும் கொல்லப்பட்டுள்ளார்.

அத்துடன், நேற்று காலை காலி – மாத்தறை பிரதான வீதியின் மிதிகமவில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், தங்காலையிலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் இருவர் காயமடைந்துள்ளதுடன், இன்றைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் கடந்த 48 மணித்தியாலங்களில் ஐந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.