Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதித் தேர்தல்; பிரசார நடவடிக்கைகளை கையாளும் அமெரிக்கர்கள்.

.

ஜனாதிபதித் தேர்தல்; பிரசார நடவடிக்கைகளை கையாளும் அமெரிக்கர்கள்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரசார நடவடிக்கைகளை கையாள்வதற்காக அமெரிக்க குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக கூறப்படுவதனை ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளைக் கையாள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட அமைப்பாளர் லசந்த குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த விடயத்தில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனவும், ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் வெளிநாடுகளின் தலையீடு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை கையாண்ட அமெரிக்க குழுவொன்று ரணிலின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை கையாள்வதற்காக இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன், குறித்த குழுவினர் சில அமைச்சர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல்கள் உட்பட ஆரம்பகட்ட நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பின்னணியிலே, ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைப்பது தொடர்பில் பல்வேறு கட்சிகளுடன் கலந்துரையாடிவரும் நிலையில், எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைப்பது தொடர்பில் உறுதியான தீர்மானங்கள் எட்டப்படவில்லை எனவும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் லசந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.