Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ரணிலின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சமூக பொலிஸ் உறுப்பினர்கள்?: தொடரும் அரசியல் காய்நகர்தல்கள்

.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் முதற்கட்டமாக மொனராகலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து குறைந்தது 5 குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி நாளை (06) புத்தலவில் கூட்டமொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இதற்காக குறைந்தது 4,000 பேரை இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சமூக பொலிஸ் குழுக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவையான அனைத்து செலவுகளையும் செய்ய வேண்டும்.

இதன் காரணமாக, பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அப்பகுதி வர்த்தகர்களிடம் சென்று பணத்தைக் கோரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மற்றுமொரு படி முன்னேறி எதிர்வரும் 14ஆம் திகதி கண்டி, கெடம்பையில் கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் குறைந்தது 10,000 பேர் பங்கேற்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு தொடங்கப்பட்டுள்ள சமூக பொலிஸ் குழுக் கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு தின்பண்டங்கள், தண்ணீர் போத்தல்கள் , மதிய உணவு வழங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

மேலும், கூட்டங்களுக்கு நாற்காலிகள் வழங்கும் பொறுப்பும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ உத்தரவு சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருவதாகவும் அது போலியானது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

எனினும், போலியானது என உத்தியோகபூர்வமாக கூறப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சார நடவடிக்கைகளுக்காகவே அவ்வாறே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.