Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சென்னை – அநுராதபுரம் இடையில் கடலுக்கு அடியில் மின் இணைப்பு: இறுதி கட்டத்தில் பேச்சுகள்!

.

 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மின் இணைப்புத் திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலம் முதல் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் பின் இந்தத் திட்டம் தொடர்பில் பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. இத்திட்டத்தை கடலுக்கு அடியில் கேபிள்கள் மூலம் செயல்படுத்தவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் அண்மையில் புதுடில்லிக்குச் சென்ற ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி செயலகத்தின் தலைமை செயலாளருமான சாகல ரத்நாயக்க முக்கிய கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

தற்போது திட்டத்தை இருநாடுகளும் இணைந்து கூட்டு முயற்சியின் கீழ் செயல்படுத்தும் இறுதிகட்ட பேச்சுகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தீவில் முக்கியத்தும் வாய்ந்த ஜனாதிபதித் தேர்தல் வருட இறுதியில் நடைபெற உள்ளது. அதற்கு முன் அரசாங்கத்தின் செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளும் நோக்கில் பல பிரமாண்ட திட்டங்களை செயல்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இதன் ஒருகட்டமாக இந்திய அரசாங்கத்தின் பிரமாண்ட திட்டங்களை செயல்பாட்டு வடிவத்துக்கு கொண்டுவர அரசாங்கம் ஆலோசித்துள்ளது.

மின் இணைப்புத் திட்டத்தை சென்னைக்கும் அநுராதபுரத்துக்கும் இடையில் செயல்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 200 ஜிவாபோட் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பில் இணைப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.