Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்; ஆயர் பேரவையின் தலைவர் மற்றும் அருட்தந்தையருடன் ஜனாதிபதி சந்திப்பு

.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர், குருநாகல் ஆயர் ஹெரோல்ட் அந்தோனி பெரேரா உள்ளிட்ட கத்தோலிக்க ஆயர் பேரவையின் அருட்தந்தையருக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் செயலாளர் நாயகம் அருட்தந்தை டொன் அன்டன் ஜயக்கொடி, கொழும்பு உதவி ஆயர் உள்ளிட்ட அருட்தந்தையர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

நாட்டில் கல்விச் சீர்திருத்தங்கள், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம், சுற்றுச்சூழல் மற்றும் கத்தோலிக்க திருச்சபை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்தும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் அருட்தந்தையர்களுக்கு ஜனாதிபதி இதன்போது தெரியப்படுத்தினார்.