Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தனிப்பட்ட முறையில் நண்பர்கள்: பிளவுகள் தொடர்பாக விளக்கமளிக்கிறார் நாமல்

.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு தெரிவிக்காது என (29) அறிவித்ததன் பின்னர் பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அந்த சூழ்நிலை தொடர்பில் நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.

அதன்போது, இவ்விடயத்தை நாங்கள் ஆரம்பத்திலேயே எதிர்ப்பார்த்தோம் என நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தேர்தல் ஒன்றுக்கு முன்னிலையாகும் போது பொதுவாக வரலாற்றில் எந்தவொரு கட்சியினதும் பலதரப்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.

கலந்துரையாடி தமது கருத்துக்கள் தொடர்பில் வினவுவார்கள். அது ஒரு பொதுவான விடயம்.

நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கட்சியை உறுதிப்படுத்திக் கொண்டு செயற்பட்டு வருகின்றோம்.

கட்சியை உறுதிப்படுத்தி எங்கள் கொள்கைகளை வெல்ல நாங்கள் செயற்பட வேண்டும்.

நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியை வெறுக்கும் பக்கத்தில் நிற்கின்றோம். அதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்களுடனேயே கொடுக்கல் வாங்கல் காணப்படுகின்றதே தவிர, விரும்பிய அரசியலினுள் அல்ல.

சில நேரங்களில் விருப்பு அரசியலில் ஈடுபட இதுவே சிறந்த நேரம் என சிலர் நினைக்கலாம்.

தேசிய வேலைத்திட்டத்துடன் பயணித்த தலைவர்கள் வெற்றி பெற்று சரித்திரம் படைத்தனர்.

தற்போது சென்று விட்டதாக கூறுபவர்கள் எங்களுடைய வீட்டிற்கும் வந்துச் சென்றவர்கள் சிலர் நேற்று இரவு மீண்டும் வந்தார்கள். இன்று காலையும் சந்தித்தேன்.

இந்த அரசியல் நன்று பழக்கப்பட்டது. இவ்வாறு நடப்பது இது ஒன்றும் முதல் தடவை அல்ல. ” எனத் தெரிவித்தார்.

மேலும், அரசியல் ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் பிரிந்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் நாம் பிரிக்கப்படவில்லை, அந்த உறவு இன்றும் உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.