Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ், இளைஞர்களை கட்டாயப்படுத்தி உக்ரைன் போரில் ஈடுபடுத்துவது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம்!

.

யாழ்ப்பாண இளைஞர்களை உக்ரைன் போரில் ஈடுபடுவதற்கு கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம் ஊடக அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளது.

விசிட் விசா ஊடாக பிரான்ஸ், பெல்ஜியம் நாடுகளுக்கு பயணிக்க முற்பட்ட யாழ்.இளைஞர்களை உக்ரைன் யுத்தத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியதாக வௌியான செய்திகள் ஆதராமற்றவை என ரஷ்ய தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை - ரஷ்யா இடையிலான பாரம்பரிய நட்பு ரீதியான உறவை இழக்கச் செய்வதை நோக்காகக் கொண்டு வௌிப்படுத்தப்படும் உறுதிப்படுத்தப்படாத தரவுகள் தொடர்பில் தூதரகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் ரஷ்ய தூதரம் தெரிவித்துள்ளது. 

தொழில் அல்லது தனிப்பட்ட ரீதியில் ரஷ்யாவிற்கு செல்லும் வௌிநாட்டவர்களை ரஷ்யா மதிப்பதாகவும் ரஷ்யாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகமே அடிப்படையில் கையாள வேண்டும் என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் உள்நாட்டிலுள்ள சட்டவிரோத வௌிநாட்டு முகவரகங்கள் இலங்கையர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியமை தொடர்பில் தூதரகத்திற்கு எந்தவொரு உத்தியோகபூர்வ தகவல்களும் வழங்கப்படவில்லை என கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை தரப்பிலிருந்து ஏதேனும் கோரிக்கைகள் விடுக்கப்படும் பட்சத்தில் ஆதரவு வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும் ரஷ்ய தூதரகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.