Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

கடும் வறட்சி – 200 காட்டு யானைகளை கொன்று மக்களுக்கு உணவு

தென் ஆபிரிக்கா

தென் ஆபிரிக்க நாடுகளில் நிலவும் வறட்சியினால் அங்குள்ள மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் வறட்சியினால் ஏற்பட்டுள்ள உணவுப் பஞ்சத்தை சமாளிக்க கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சுமார் 700 வன விலங்குகள் கொல்லப்படவுள்ளதாக நமீபியா அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் நமீபியாவைத் தொடர்ந்து சிம்பாப்வேயிலும் யானைகளைக் கொலை செய்து மக்களுக்கு உணவளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் 50 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. தற்சமயம் 200 காட்டு யானைகளைக் கொன்று அதன் இறைச்சியை மக்களுக்கு உணவாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலை தொடர்ந்தால் அப் பிரதேசங்களில் வன விலங்குகள் முற்றிலும் அழியும் அசாதாரண சூழ்நிலை ஏற்படும்.