Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு!

10,000 பேரை மாத்திரமே தங்கவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இலங்கையின் சிறைகளில் 41,000-ற்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற தடுப்புக்காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் மரணங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. 31 உயிர்களை பலியெடுத்த சிறை வன்முறையின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறையிலிருந்து உயிர்பிழைத்த கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வெலிக்கடை சிறைக்குள் செல்ல, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது. கைதிகள் மாற்றப்பட்ட இடங்களில் பழிவாங்கும் கொலைகள் மற்றும் சித்திரவதைகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, தடுப்புக்காவல் நிலையங்களுக்குள் தடையின்றி செல்ல இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது.

நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து பிற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் மரணங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது. நீண்டகாலமாக அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கங்கள் தவறிவருவது, சிறைக்கைதிகளின் மற்றும் சிறைச்சாலை பணியாளர்களின் உயிர்களை ஆபத்தில் தள்ளுவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய பிரதிப் பணிப்பாளர் பாபு ராம் பந்த் வலியுறுத்தியுள்ளார்.

சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நீண்டகாலமாக சுட்டிக்காட்டி வரும் இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கங்கள் தவறிவருவது, கைதிகளின் மற்றும் சிறைச்சாலை பணியாளர்களின் உயிர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
நீண்டகால விசாரணைக்கு முன்னரான தடுப்புக்காவல், சிறைகளில் நெரிசல், மற்றும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏராளமானோரை சிகிச்சைக்கு அனுப்பாமல் தடுத்து வைத்தல் ஆகியவை ஐ.நா. அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட குறிப்பிடத்தக்க பிரச்சினைகளாகும்.

இலங்கை நீதி அமைச்சு வெளியிட்ட அண்மைய புள்ளிவிவரங்களுக்கு அமைய, சுமார் 10,000 பேரை மாத்திரமே தங்கவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இலங்கையின் சிறைகளில் 41,000-ற்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.