Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வீரவன்சவிற்கு அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி; ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு?

.

 

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு பலம் வாய்ந்த அமைச்சுப் பதவியை வழங்குவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய பத்திரிகையொன்றின் செய்தியை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க குறித்த இரு உறுப்பினர்களும் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாகவும் அதற்கு விமல் வீரவன்ச இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட விமல் வீரவன்ச பின்னர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயேட்சையாக செயற்பட்டார்.

அரசாங்கத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அவர் வெளியேறியிருந்தார். எவ்வாறாயினும், அண்மையில் பிரபல தொழிலதிபர் ஒருவருடன் கூட்டணி ஒன்றையும் ஏற்படுத்தியிருந்தார்.

“சர்வசன அதிகாரம்” (Sarvajana Balaya) என்ற புதிய கூட்டணி கடந்த 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதில் தேசிய சுதந்திர முன்னணி சார்பில் விமல் வீரவன்ச, ஜனநாயக இடதுசாரி முன்னணி சார்பில் டி.வி.டி.திலகசிறி, பிவித்துரு ஹெல உறுமய சார்பில் உதய கம்மன்பில, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜி.வீரசிங்க, யுதுகம தேசிய அமைப்பு சார்பில் கெவிந்து குமாரதுங்க ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.