Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சட்டத்தை மாற்றியேனும் எதிர்க்கட்சிகள் ஆட்சியமைப்பதை தடுப்போம்! என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை முற்றிலும் ஜனநாயக விரோதமான கருத்தாகும்!!

எந்த வகையிலாவது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வோம் என்றவாறு ஆளுந்தரப்பு அச்சுறுத்தல்!

தோல்வியை ஏற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. சட்டத்தை மாற்றியேனும் எதிர்க்கட்சிகள் ஆட்சியமைப்பதை தடுப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை முற்றிலும் ஜனநாயக விரோதமான கருத்தாகும். அவர் நிறைவேற்றதிகார ஜனாதிபதி மாத்திரமே. மாறாக சட்டத்துக்கு மேலானவர் அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எந்த வகையிலாவது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வோம் என்றவாறு ஆளுந்தரப்பு அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறது. அதற்கு சமாந்தரமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜே.வி.பி.யின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போது, எதிர்க்கட்சிகள் சபைகளை அமைத்தால் சட்டத்தை மாற்றியேனும் அவற்றை கலைப்பதாகக் குறிப்பிட்டார்.

தேர்தலுக்கு முன்னரும் அவர் இவ்வாறு தான் அச்சுறுத்தல் விடுத்தார். ஆனால் மக்கள் 23 இலட்சம் வாக்குகளை குறைத்திருக்கின்றனர். அதற்கு பதிலாக எதிர்க்கட்சிகளுக்கு அதிகாரத்தை வழங்கியிருக்கின்றனர். மக்கள் ஆணையை மீறும் வகையிலான கருத்துக்களையே தற்போது ஜனாதிபதி வெளியிட்டிருக்கின்றார். ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாகக் கூறியல்லவா ஆட்சி அதிகாரத்தைப் பெற்றனர்? அவ்வாறெனில் இது தான் ஜனநாயகமா?

உள்ளுராட்சிமன்றங்களுக்கென சட்டம் காணப்படுகிறது. அந்த சட்டத்தை மீறி அரசாங்கத்தால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது. பெரும்பான்மை இல்லாவிட்டால் உள்ளுராட்சிமன்றங்களின் பதவிகளுக்கு வாக்கெடுப்பின் மூலமே நியமனம் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஜனாதிபதியின் உரையை அவதானிக்கும் போது வாக்கெடுப்பின்றி தேசிய மக்கள் சக்தியினரை பதவிகளில் அமர்த்துவதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவே தோன்றுகிறது.

தோல்வியை ஏற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. தமக்கு ஏன் 23 இலட்சம் வாக்குகள் குறைவடைந்தன ஆராய்ந்து மதிப்பிடுவதில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தோற்றுப் போயுள்ளது. ஜனாதிபதியின் தற்போதைய உரையின் மூலம் மேலும் 10 வீத வாக்குகள் இழக்கப்பட்டிருக்கின்றன. தான் சட்டத்திலும் மேலானவர் என்ற போக்கிலேயே ஜனாதிபதியின் உரை அமைந்திருந்தது. எதிர்க்கட்சியிலிருந்த போது இந்த தேர்தல் முறைமையே சிறந்தது எனப் போற்றியவர்கள், இன்று அதனை ஏற்க மறுக்கின்றனர்.

முன்னர் இந்த தேர்தல் முறைமையை மாற்ற வேண்டும் என நாம் வலியுறுத்திய போது, எதிர்க்கட்சிகள் தேர்தலை தாமதப்படுத்த முற்படுவதாகக் கூறினர். அன்று நாம் கூறியதை இன்று அரசாங்கம் கூறுகிறது. அரசாங்கம் எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு முயன்றால் நாம் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றார்.