மூன்று மாதத்திற்கு முன் மரணித்தாக நினைத்த சிறுவன் உயிருடன்!
15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பாணந்துறை கடற்கரையில் குடும்பத்தினர் கண் முன்னே கடல் நீரில் மூழ்கினர்.
மூன்று மாதத்திற்கு முன் மரணித்தாக நினைத்த சிறுவன் உயிருடன்!
சுமார் 3 மாதங்களுக்கு முன்பு, 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பாணந்துறை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது, குடும்பத்தினர் கண் முன்னே நீரில் மூழ்கினர். சில நாட்களுக்குப் பிறகு ஒரு சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் இரண்டாவது சிறுவனைப் பல நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், குடும்பத்தினர் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தி, கத்தம் ஓதி துஆவும் செய்தனர்.
இந்நிலையில், நேற்று அந்த இரண்டாவது சிறுவனின் பெற்றோருக்கு மலேசியாவிலிருந்து ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. கடலில் மயக்க நிலையில் மிதந்து கொண்டிருந்த அந்தச் சிறுவனை அவ்வழியால் பயணம் செய்த ஒரு சரக்குக் கப்பல் ஊழியர்கள் மீட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களாக மலேசியாவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது அவருக்குப் பழைய நினைவுகள் திரும்பியவுடன், அவர் தனது பெற்றோரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.


