Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

காவல் நிலையம் முன்பு பெண் தற்கொலை; தேசிய ஆதி திராவிடர் ஆணையம் விசாரணை!

என்ஜினியராக பணி புரிந்து வரும் கீர்த்திகா கடந்த 9 ஆம் தேதி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது சகோதரர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக இரு பெண்கள் விஷம் குடித்த சம்பவம் குறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் விசாரணை நடத்தியது.

காவல் நிலையம் முன்பு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் விசாரணை நடத்தியது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி அரச மர தெருவை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் தினேஷ் (32) மீது 13 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் தினேஷ் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதாக கூறி தினேஷின் தங்கைகளான மேனகா (31) கீர்த்திகா (29) ஆகியோர் நடுக்காவேரி போலீஸ் நிலையம் முன்பு கடந்த 8ஆம் தேதி விஷம் குடித்தனர்.

இதனையடுத்து 2 பேரையும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி என்ஜினியராக பணி புரிந்து வரும் கீர்த்திகா கடந்த 9 ஆம் தேதி உயிரிழந்தார். மேனகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நடுக்காவேரி காவல் ஆய்வாளர் சர்மிளாவை கடந்த 11 ஆம் தேதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாவட்ட எஸ்பி ராஜாராம் உத்தரவிட்டார். மேலும் இரண்டு துணை காவல் ஆய்வாளர்கள், இரண்டு பெண் போலீசார் ஆகியோர் கடந்த 16ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 

மேலும் கீர்த்திகா உயிரிழந்தது தொடர்பாக அவருடைய உறவினர் ராஜபாண்டியன் கொடுத்த புகாரின்பேரில் தற்கொலைக்கு தூண்டுதல், ஆதிதிராவிடர் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே காவல் ஆய்வாளர் ஷர்மிளா உட்பட 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீர்த்திகாவின் உடலை வாங்க மறுத்து நடுக்காவேரி அரச மர தெருவில் தொடர்ந்து உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர் நேற்று (17ஆம் தேதி) நடுக்காவேரிக்கு சென்று கீர்த்திகாவின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேனகாவிடம் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான அறிக்கை தலைமையிடத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன் கூறியுள்ளார். இந்த விசாரணையின் போது மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.