Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மூன்று மடங்காக அதிகரிக்கும் தேர்தல் செலவுகள்: அச்சு நடவடிக்கைக்கு மாத்திர்ம 800 மில்லியன் தேவை

.

அரசாங்க அச்சகத் திணைக்களம் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சீட்டு அச்சிடும் செலவினங்களில் கணிசமான அதிகரிப்பைக் கணித்துள்ளது.

முந்தைய தேர்தல் சுழற்சியுடன் ஒப்பிடுகையில் செலவுகள் மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அச்சிடுவதற்கு அத்தியாவசியமான மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் தேவையான வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகள் இந்த கணிசமான உயர்வுக்கு காரணமென அரசாங்க அச்சுப்பொறியியலாளர் கங்கா கல்பானி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாக்குச் சீட்டு உற்பத்தி தொடர்பான செலவுகள், தளபாடங்கள் மற்றும் செயட்பாட்டுச் செலவுகள் உட்பட்டவை, குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளன.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட அச்சு நடவடிக்கைகளுக்காக 800 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தடவை வேட்பாளர்களின் எண்ணிக்கையில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டால் அச்சிடும் செலவை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.