Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

யாருக்கு ஆதரவென செப்.20 இலும் தமிழரசின் முடிவை அறிவிக்கலாம்

.

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் அறிவிப்பதற்கு தாம் அவசரப்படவில்லை என்றும், வேட்பாளர்கள் அனைவரினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியான பின்னரே அது தொடர்பில் தீர்மானிப்போம் என்றும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றின் போது, ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

சகல வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியான பின்னர் அவை தொடர்பில் ஆராய்ந்து யாருக்கு ஆதரவை வழங்குவதென்று நாங்கள் தீர்மானிப்போம். இதற்கு முன்னர் நடந்த ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே யாருக்கு ஆதரவு என்பதனை கூறியுள்ளோம். எங்களின் வேட்பாளர் எவரும் போட்டியிடாத காரணத்தினால் எங்களுக்கு இதில் அவசரம் கிடையாது. செப்டம்பர் 20ஆம் திகதி வேண்டுமென்றாலும் எங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கலாம் என்றார்.