Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

‘அரகலய’ போராட்டக்காரர்களுக்காகவே நாமல்: இளம் தலைமையை ஆதரிக்குமாறு அழைப்பு

.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ள அரகலய போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

அனைவரும் எதிர்பார்க்கும் இளம் தலைவர் ஒருவர் எதிர்காலத்தில் நாட்டை வழிநடத்தத் தயாராக உள்ளார். அவரை ஆதரிக்குமாறு இளைஞர்களிடம் கோரிக்கை விடுக்கிறோம்.

திருடங்கள் அனைவரும் கட்சியில் இருந்து சென்றுவிட்டதுடன், கட்சியும் தூய்மையாகிவிட்டது. எம்மோடு இணைந்துக்கொள்ளுமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.” என்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவை அக்கட்சி அறிவித்துள்ளது. விரைவில் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை நாமல் ராஜபக்ச செலுத்த உள்ளார்.

இதேவேளை, சர்வமத வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் தமது பிரசார நடவடிக்கைகளை 16ஆம் திகதிமுதல் நாமல் ராஜபக்ச ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரியவருகிறது.