Breaking News
தெலுங்கானா சுரங்கப்பாதை சரிவு விபத்து: மீட்பு பணியில் சிக்கல் என்கிறார் அமைச்சர்.
.

தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இடிந்து விழுந்த பகுதியை அடைய குழுக்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் நிலைமை 'மோசமாக இருக்கிறது' என்றும், நீர் வரத்து மீட்புப்பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் தெலுங்கானா அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதனால் மீட்பு பணி மேலும் தொய்வடைந்துள்ளதாக தெரிகிறது.
"சுரங்கப்பாதையில் இயற்கையான பாறைகள் தளர்வானதால், திடீரென தண்ணீர் மற்றும் சேறு உள்வந்து, சுரங்கப்பாதையில் சுமார் 12-13 அடி வரை நிரம்பியது. இது மிகவும் சவாலான சூழ்நிலை, மேலும் நெருக்கடியைத் தீர்க்க தொழில்நுட்ப வல்லுநர்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர்," என்று அமைச்சர் விளக்கினார்.