Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

வெள்ளவத்தையில் கார்த்திகை மலரை அவமதித்து பாதணி; தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு.

கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை பகுதியில் உள்ள காட்சியறையில் குறித்த பாதணி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தையில் கார்த்திகை மலரை அவமதித்து பாதணி; தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு.

இலங்கை தமிழர்களின் அடையாளமாக காணப்படும் கார்த்திகை மலரை அவமதிக்கும் வகையில், முன்னணி பாதணி நிறுவனம் ஒன்று கார்த்திகை மலர்கள் பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைத்துள்ளது.

கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை பகுதியில் உள்ள காட்சியறையில் குறித்த பாதணி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளதுடன் குறித்த இந்த பாதணியை புறக்கணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வாறான அவமதிப்பாக செயலில் ஈடுபட்டு தமிழர்களை இழிவுப்படுத்தும் வர்த்தக நிலையங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பலரும் எதிர்வினையாற்றியுள்ளனர். குறிப்பாக தமிழ் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராச கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உலக அரங்கில் ஈழத் தமிழர்களின் குறியீடாக கார்த்திகை மலர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.