தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலத்தில் பாலியல் வன்புணர்வு!
சவ கிடங்கில் என்ன நடந்தது! சம்பந்தப்பட்ட முன்று பேரை உடன் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!!
இச் சம்பவம் கடந்த 24 ம் திகதி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சவ கிடங்கில் இடம் பெற்று உள்ளது.
இது குறித்து மரணித்த பெண்ணின் (ஹட்டன் எபோட்சிலி தோட்ட தொழிலாளர்கள்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவி தலைவர் கணபதி கனகராஜ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவி தலைவர் கணபதி கனகராஜ் அவர்கள் இச் சம்பவம் குறித்து கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரியின் கவனத்திற்கு கடந்த 25 ம் திகதி கொண்டு வந்தும் கடந்த 8 நாட்களாக எவ்விதமான நடவடிக்கையும் இல்லாததால் இன்று மதியம் வைத்திய சாலையில் எபோட்சிலி தோட்ட மக்கள் ஒன்று கூடி மரணித்த பெண்ணுக்கு சவ கிடங்கில் என்ன நடந்தது என்பதை விபரமாக வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட முன்று பேரை உடன் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் நாளை காலை 8 மணிக்கு மீண்டும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ளதாகவும் தற்போது களைந்து செல்வதாக கூறி உள்ளனர்.


