Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

யாழ்ப்பாணம் வரலாற்றுக் குறிப்புகள் - பகுதி-02. போர்த்து கேயர் கால யாழ்ப்பாணக்குடியிருப்புகள் 1617 - 1658.

.

டச்சுகார்ர் காலம் 1658-1795 

1658 யூன் 23 - போர்த்து கேயரின் கடைசி தரிப்பீடமான யாழ்ப்பாண கோட்டையை  கைப்பற்றி அதை தம்வசப்படுத்தினர். அந்த கால கட்டத்தில் யாழ்ப்பாண குடாநாட்டில்  யேசுவின் சபைக்கு சொந்தமான ஒர் கல்லூரியும் ஐந்து குருவானவர்களும்,பிரான்சிஸ்கன்  கன்னியர் மடமும்,டொமினிக்கள் ஆச்சிரமும்,வலிகாமத்தில் 14 கோவில்களும்,   தென்மராச்சியில் 5 கோவில்களும், பச்சிலைப்பள்ளியில் 3 கோவில்களும் நகரை அண்டிய தீவுகளில் ஒவ்வொரு கத்தோலிக்க கோவில்களும் இருந்தன. யாழ் கோட்டைக்குள்ளும்   குருசு வடிவில் அமைக்கப்பட்ட கத்தோலிக்க கோவிலும் இருந்தது.
1658 ஆகஸட் 29 - வண டாக்டர் பால்தேயுஸ் என்பவரால் டச்சுகாரரின் சீர்திருத்த  மதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1658 - செப்டொம்பர் 01 - டொன் லூயிஸ் பூததம்பியும் வேறு ஒரு சில போத்துக்  கேயரும் டச்சுக்கார்ருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட சதிமுயற்சி,டொன்  மனுவல் டி அந்திராடோ முதலியார் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது.  பின் சதிகாரர் கொலை செய்யப்பட்டனர்.
1658 செப் - டொன் லுயில் பூதத்தம்பி போர்த்துக் கேயருடன் வைத்துக் கொண்ட  துரோக செயல்களை தெரிந்திருந்தும் அதை தெரியப்படுத்தாமல் இருந்த காரணத்திற்காக யேசுவின் சபையை சேர்ந்த போத்துகேய குருவான வணக்கத்துக்குரிய கல்தேய்ரோ  என்பவர் டச்சுகாரரால் தலை துண்டிக்கப்பட்டார். 
1658 - போர்த்துக்கேய குருமார் யாழ்ப்பாணத்தை விட்டு டச்சுகாரர்களால் விரட்டப்பட்டனர்.
1658 செப் 19 - ரோமன் கத்தோலிக்க குருக்களை தனித்துவைத்தல், பாதுகாத்தல் போன்றவை மரணதண்டனைக்குரிய குற்றங்களாக டச்சுகாரர்களால் பிரகடனப்படுத்தப்பட்டது.
1658-நவம்பர் -20 - போத்து கேயர் மீதான வெற்றிக்கு நன்றி சொல்லும் நாளாக இன்நாள் பிரகடனப்படுத்தப்பட்டது.
1659 - பிரித்தானியர்களான கப்டன் ரொபேட் நொக்ஸ், அவனது மகனும் 'ஆன்போர்க்கப்பல்' ஐ சேர்ந்த சில சிப்பந்திகளும் மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டு கண்டிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
1661 - பால்தேயுஸ் எனப்படும் புரட்டஸ்தாந்து பாதிரியாரும், வரலாற்றாசிரியருமான  பருத்திதுறைக்கு விஜயம் செய்தார். ஒர் அழகான கோட்டையும், டச்சுக்கோவிலும்  இங்கே கட்டப்பட்டது.
1661 - முத்துக்குளிக்கும் தொழில் ஆரம்பிக்கப்பட்டது.
1676 - கோவாவில் பிறந்த யோசப் வாஸ் குருவாக திரு நிலைப்படுத்தப்பட்டார்.
1678 - வட்டுக்கோட்டையில் முதலாவது டச்சுக்கோவில் கட்டி முடிக்கப்பட்டது.  பின்னாளில்1 816 ஆம் ஆண்டில் பிரவுண் றிக் என்ற கவர்னரால் அமெரிக்க மிசனரி மாருக்கு,அவர்கள் யாழ்ப்பாணம் வந்தபோது இக்கோயில் ஒப்படைக்கப்பட்டது.
1679 - 20 வருடங்களின் பின் நொக்ஸ் கண்டிச்சிறையில் இருந்து தப்பி யோடி என்னுமிடத்தில் இருந்த டச்சுகாரர்களிடம் வந்தடைந்தான்.
1682 - கோவாவில் புனித பிலிப் நேரியாரின் சபை (பிரார்த்தனை இடம்) நிறுவப்பட்டது.
1682 - விக்கிரக ஆராதனை,ஆவிகளின் ஆராதனை தண்டனைக் குரியவை என கவர்னர் லோரன்ஸ் பொன் பைல் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
1685 - யோசப் வாஸ் சுவாமிகள்,புனித பிலிப் நேரியாரின் சபையில் இனைந்தார். 
1687 - பிலிப் நேரியார் சபையை சேர்ந்த யோசப் வாஸ் அடிகளார் ஓர் பிச்சைகாரனாக  (யாசகன்) வேடம் பூண்டு யாழ்ப்பாணம் வந்தார்.அங்கு சில்லாலையிலும் அதை சுற்றிய  கிராமங்களிளும் வேதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
1688 - யாழ்ப்பாண இராச்சியத்தில் 180000 பேர் ஞானஸ்தானம் பெற்றுக்கொண்டதாக 
பால் தேயுஸ் என்கிற டச்சு பாதிரியார் அறிவித்தார்.
1689 - புளோரிஸ் புனொம் என்பவர் யாழ்ப்பாண கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
1690 - டிசம்பர் 24 - கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட நல்லிரவில் ஒன்று கூடிய  கத்தோலிக்கர்கள்,பொன் நீட் என்பவரின் கட்டளைப்படி கைது செய்யப்பட்டு சாட்டையால் அடிக்கப்பட்டனர்.
1691 - யோசப் வாஸ் வன்னி,புத்தளம் ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்தார்.
1692 - யோசப் வாஸ் கண்டி சென்று அங்கு கத்தோலிக்க சமயத்தை மீளவும் நிறுவ  முயற்ச்சி செய்தார். அங்கு கைது செய்யப்பட்டு 2 வருடங்கள் சிறைவைக்கப்பட்ட போது சிறைக்குள் கத்தோலிக்க மதத்தை பரப்பினார்.
1694 - யோசப் வாஸ் மாதோட்டம், பூனகரி, யாழ்பாணம் போன்ற இடங்களுக்கு விஜயம்  செய்தார்.
1694 யூலை 3 - யாழ்ப்பாணக் கமாண்டர் புளொரிஸ் புளொம் மரணமடைந்தார்.
1694 - கென்றிக் சுவாடொர் கூன் யாழ்ப்பாண கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்டார்.  டச்சுகிழக்கிந்திய கொம்பனியை வடக்கில் பேணுவதற்கு மிகவும் தரமான செயற்பாடுகளை செய்த அதிகாரியாக இவருடைய வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1696 - இலங்கை ரோமன் கத்தோலிக்க சபையின் குரு முதல்வராக யோசப் வாஸ்  நியமிக்கப்பட்டார்.
1697 - ஜெராட் டி கீர் என்கிற கவர்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
1700 - வீரமாமுனிவர் எனப்படும் யோசப் பெஸ்கி இந்தியா வந்து சேர்ந்தார்.
1703 - வண ஜேக்கப் கொஸ்சால்வேஸ் யாழ்ப்பாணம் வந்தார். அவர் கத்தோலிக்க  குருவானவராகும்.
1704 - கவர்ணர் கோர்ணலிஸ் ஜேம்ஸ் சீமோன் யாழ்ப ;பாணத்திற்கு விஜயம் செய்தார்.
1705 - டச்சுக்காரர்கள் கொழும்பில் ஓர் குரு மடத்தை ஆரம்பித்தனர் கிரேக்கம்,  எபிரேயம், லத்தின், டச்சு, போத்துகீஸ், சிங்களம், தமிழ் மொழிகள் இங்கு கற்பிக்கப்பட்டன.
1707 - யூன் 4 டச்சு அரசாங்கத்தால் தேச வழமைச்சட்டம் பிரகடனப்படுத்தப்படது  இதுவே சிவில் நீதிமன்றங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டது.
1711 - யோசப் வாஸ் அடிகளார் கண்டியில் மரணமடைந்தார்.
1711 யூன் 6 - இந்து மத சடங்குகள் டச்சு அரசாங்கத்தால் கடும் தண்டனைக்குரிய  குற்றங்களாக பிரகடனப்படுத்தப்பட்டன.
1715 - கத்தோலிக்க குருமார் ஞானஸ்தானம் வழங்குவது தடைசெய்யப்பட்டது.
1715 - ரோமன் கத்தோலிக்கர்கள் பொதுவாக ஒன்று கூடுவதும்,தனியாக சடங்கு  செய்வதும் தடை செய்யப்பட்டது.
1719 - கவர்ணர் 'றம்ப்' யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
1722 - யேக்கப் டி யொங் (சீனீயர்) யாழ்ப்பாண தளபதியாக நியமிக்கப்பட்டார்.
1726 - யாழ்ப்பாணத்தில் கடும் மழை பெய்ததால் பெரும் பட்டினியும், நோயும் உண்டாயிற்று.
1732 ஆகஸ்ட் 25 - கோட்டாஸ் வூட்டாஸ் என்பவர் யாழ்ப்பாண கமாண்டராக நியமிக்கப் பட்டார்.
1736 - சுயபாசையில் புத்தகங்களை வெளியிடுவதற்காக டச்சு அரசாங்கத்தால் ஓர்  அச்சகம் நிறுவப்பட்டது. இது மிகவும் தீவிரமாக செயற்பட்டது.
1739 - கவர்ணர் பொன் இமொப் யாழ்ப்பாணத்திற்கும்,மன்னாருக்கும் விஜயம் செய்தார்.
1740 - ஒரு தொகுதி 'தோம்பு' தொகுக்கப்பட்டது. 
1742 - வீரமாமுனிவர் எனப்படும் ஜோசப் பெஸ்கி மணற்பாறையில் மரணமடைந்தார்.
1746 - கவர்ணர் ஸ்ரெய்ன் பொன் கொல்னஸ் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
1746 - ஒரு முத்துக்குளிப்பு நிலையம் 4766 பவுண்ஸ் பணம் லாபமீட்டியது. 
1747 - ஓர் முத்துக்குளிப்பு நிலையம் 21400 பவுண்ஸ் லாபமீட்டியது. 
1748 - யேக்கப் டி ஜொங் (யூனியர்) யாழ்ப்பாண கமாண்டராக நியமிக்கப்பட்டார்.
1748 - ஓர் முத்துக்குளிப்பு நிலையம் 38580 பவுண்ஸ் லாபமீட்டியது.
1748 - ரோமன் கத்தோலிக்கரை குருவாக கற்பித்தல் தடைசெய்யப்படுகிறது எனப்பிரகடனப்படுத்தப்பட்டது.
1749 - ஒரு முத்துக்குளித்தல் நிலையம் 68375 பவுண்ஸ் லாபமீட்டியது.
1749 - வணக்கத்துக்குரிய பிலிப் மெல் கோலால் கிரேக்க மொழியில் இருந்து தமிழிற்கு மொழி பெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு புத்தகம். டச்சு அரசாங்கத்தால் அச்சிடப்பட்டு  வெளியிடப்பட்டது.
1751 - கத்தோலிக்க குருமார் திருப்பலி நிறைவேற்றுவது தடைசெய்யப்பட்டது.
1753 - ஒரு முத்துக்குளித்தல் நிறுவனம் 6360 பவுண்ஸ் லாபமீட்டியது.
1754 - யாழ்ப்பாணத்து தோம்பு இறுதியாக மேற்பார்வை செய்யப்பட்டது.
1754 - ஒரு முத்துக்குளித்தல் நிலையம் 1469 பவுண்ஸ் லாபமீட்டியது.
1756 - தெல்லிப்பளையை சேர்ந்த பூலோகசிங்கம் முதலியார் பிலிப் குமாரவேலன்  யாழ்ப்பாண பட்டிணத்தில் கிழக்கிந்திய கம்பனியின் முதலாவது சுதேச வைத்தியராக  நியமிக்கப்பட்டார்
1758 - கத்தோலிக்க திருமணங்களுக்கு வரி விதிக்கப்பட்டது.
1758 - யூன் 26 வண்ணார் பண்ணையை சேர்ந்த டொன் பிலிப்பு சிற்றம்பல முதலியார்  கிழக்கிந்திய கம்பனியின் தரகராக நியமிக்கப்பட்டார்.
1759 மார்ச் - பஸ்கா விசிறி டச்சு மூதாதையர் மத்தியில் பயன்பாட்டிற்கு அறிமுகம்.