Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான அறிக்கை விபரங்கள் வெளியிடப்படும்; உதய கம்மன்பில.

.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வௌியிடப்படாமல் இருந்த இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியுடன் நிறைவடைவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடத் தயங்கும் இரண்டு அறிக்கைகளை வெளியிடுமாறு ஜனாதிபதிக்கு வழங்கிய காலம் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைகிறது.

இந்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நிறைவேற்றி, அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்படும் அபாயத்தைத் தவிர்க்க இன்று காலை 10 மணி வரை காலவகாசம் உள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி அரசியலமைப்பின் 38 ஆவது சரத்தை மீறி, குறித்த காலப்பகுதிக்குள் இந்த அறிக்கையை வழங்கத் தவறினால், நான் நிச்சயமாக அந்த அறிக்கைகளை முன்வைப்பேன்” என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான சர்ச்சைக்குரிய அறிக்கைகள் கடந்த 10 ஆம் திகதி (10.10.2024) தபால் மூலம் தனக்கு கிடைத்ததாக உதய கம்மன்பில ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இரு அறிக்கைகளிலும் உள்ளடங்கப்பட்டுள்ள சில காரணிகளில் தேசிய மக்கள் சக்தியுடன் தொடர்புடைய சிலர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால் இந்த இரு அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்த தற்போதைய ஜனாதிபதி முன்வரவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கைகளின் இணைப்புகள் கூட தமக்கு தபால் மூலம் கிடைத்ததாக இணையவழி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகளை சரியான நேரத்தில் வெளியிடத் தயார் என அமைச்சர் விஜித ஹேரத் பதிலளித்திருந்தார்.

மார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தரப்புகளிலிருந்து பல விவாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.