Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

வாக்களிப்பினை பகிஸ்கரித்தல் மறைமுகமாக பேரினவாதத்திற்கு துணைபோகும்

.

வாக்களிப்பினை பகிஸ்கரித்தல் என்பதும் மறைமுகமாக பேரினவாதத்திற்கு துணைபோகும் செயற்பாடாகவே நோக்குவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊடாக இந்த நாட்டில் தமிழ் மக்களும் சமஉரிமை பெற்று வாழவேண்டும் என்பதை நிலை நிறுத்துவதற்காக எதிர்வரும் 21ஆம் திகதி தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கோருகின்றோம்.

இலங்கை தமிழரசுக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்கும் தீர்மானத்தினை அறிவுத்துள்ள நிலையில் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினரும் மாவட்ட குழுவின் செயலாளருமான ஞா.சிறிநேசன் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தட்டுமுனை பகுதியில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் வகையிலான பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

வாகரை பிரதேச பொது அமைப்புகளின் ஒருங்கமைப்பில் பிரதேச சிவில் க.இராசலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் அருண்தம்பிமுத்து,முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,மா.நடராஜா மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்கும் வகையில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.