Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சஜித்துடன் இனி விவாதம் இல்லை: ஜே.வி.பி ஆவேசம்

.

 

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இனி எந்தவொரு விவாதமும் இல்லையென தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் முன் விவாதம் தொடர்பில் பயனற்ற விடயங்களை கூறுவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“சஜித் பிரேமதாச அறிவித்தது ஜூன் மாதம் 06 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தி விவாதத்திற்கு ஒப்புக்கொண்டது. ஆனாலும் அதை எதிர்கட்சித் தலைவர் புறக்கணித்து விட்டார்.

இதிலிருந்து அவர் ஒரு விவாதத்தைக்கூட எதிர்கொள்ள முடியாத தலைவர் என்பது மக்களுக்குத் தெரிந்திருக்கும். அதனால் இனி எந்தவொரு விவாதமும் இல்லை.

அவரை சிறுவர்கள் முன் விவாதம் குறித்த பயனற்ற விடயங்கள் கூறுவதை நிறுத்துமாறு வலியுறுத்துகிறோம். இரு தலைவர்களுக்கும் இடையில் ஒரு விவாதத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அது புதிய அரசியல் கலாச்சாரமாக இருக்க வேண்டும்” என மேலும் கூறியுள்ளார்.