Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; வேட்புமனுக்களை இரத்துசெய்வதற்கு அரசாங்கம் திட்டம்

.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; வேட்புமனுக்களை இரத்துசெய்வதற்கு அரசாங்கம் திட்டம்

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் செல்லுபடியற்றதா என்பதை ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி பிரதமருக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்கள் தமது கடமைகளில் ஈடுபடுவதிலும் ஏனைய நடவடிக்கைகளின் போதும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதனை கருத்தில் கொண்டு இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருடத்திற்குள் நடத்துவதற்கு சட்டமா அதிபர், தேர்தல் ஆணையாளர் மற்றும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு பிரதமருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெண்களின் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கியதாக முந்தைய முறையிலே இந்தத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.