மியான்மார் அரசுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்,பொதுமக்கள் தொடர் போராட்டம்?
,

மியான்மாரில் சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியின் வீட்டை அந்த நாட்டு அரசாங்கம் ஏலம் விட்டது. இருப்பினும் அந்த வீட்டை யாரும் வாங்க முன்வராததால் மியான்மார் அரசு ஏமாற்றம் அடைந்துள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் இருந்து போராடியவர் ஆங் சான் சூகி. இதற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருந்தார்.
தொடர் போராட்டம்: இவருடைய தொடர் போராட்டம் காரணமாக அங்கு ராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது. தொடர்ந்து 2015-ம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் 2020-ம் ஆண்டு பொதுத்தேர்லில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். 2021-ம் ஆண்டு அந்த நாட்டை மீண்டும் ராணுவம் ஆட்சிக்குள் கொண்வரப்பட்டதன் பின். ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் உள்ள ஆங் சான் சூகியை விடுதலை செய்யக்கோரி அங்கு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது அந்த நாட்டின் ராணுவம் கோர முகத்தை காட்டி அடக்கி வருகிறது. மியான்மரில் கடுமையான நிதி நெருக்கடி நிலவி வரும்நிலையில் ஆங் சான் சூகிக்கு சொந்தமான சொத்துகளை ராணுவம் விற்று பொருளாதார இழப்பை சரிகட்டி வருகிறது.
இராணுவ நெருக்கடி நிலையின்போது ஆங் சான் சூகி அடைக்கப்பட்டிருந்த வீடு கையகப்படுத்தப்பட்டது. மேலும் அதனை ஏலம் விட ராணுவம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் ஏலம் விடப்பட்ட அந்த வீட்டை யாரும் வாங்க முன்வரவில்லை.வரலாற்று சிறப்பு வாய்ந்த நினைவு சின்னமாக கருதப்படும் அந்த குட்டி பங்களா, யங்கூனில் சூகியின் தந்தையும், அந்த நாட்டின் விடுதலை போராட்ட வீரரான ராணுவ தளபதி ஆங் சாங்கும் வசித்து வந்த பூர்வீக வீடாக உள்ளது. அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், ஐ.நா சபை முன்னாள் பொதுச்செயலாளர் பான்-கி-மூன் முதலியவர்கள் அந்த வீட்டில் வைத்துதான் ஆங் சான் சூகியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.ஏலம் விடும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், மியான்மாரில் ஆளும் ராணுவ அரசுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஆங் சான் சூகியின் வீட்டை ஏலம் விட மூன்றாவது முறையாக ராணுவ அரசு முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.