நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று இரவு நாட்டிலிருந்து புறப்பட்டார்.
நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று நாட்டில் இருந்து அமெரிக்காவிற்குப் புறப்பட்டு சென்றதை அடுத்து இந்த பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதியின் கீழ் டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்துக்கு மூன்று பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஜனாதிபதியுடன் அமெரிக்க விஜயத்தில் இணைந்த அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்துக்கு ஒரு பதில் அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, தொழிற்சங்க அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த பெர்னாண்டோ நிதி மற்றும் திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சரான எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதாரத்தின் பதில் அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, வெளியுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அநுரகுமார திசாநாயக்க நாட்டிலிருந்து புறப்பட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (22) இரவு நாட்டிலிருந்து புறப்பட்டார்.
நாளை(23) புதன்கிழமை அந்த நாட்டு நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இணைந்து கொண்டார்.


