Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இரட்டைக் கொலை: நாட்டின் அனைத்து சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகல்!

நாடளாவிய ரீதியில் அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் சட்டத்தரணிகள் விலகி இருக்க நடவடிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பாக, நாட்டின் அனைத்து சட்டத்தரணிகளும் இன்று (16) நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய, இக்கொலைச் சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (15) மாலை நடைபெற்ற விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் பின்வரும் நான்கு முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக எடுக்கப்பட்டன. அதன்படி,
பாதுகாப்பு உறுதிப்படுத்தல்: நாட்டில் நிலவும் கொலை கலாசாரத்தை முடித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணிப்புறக்கணிப்பு: நாடளாவிய ரீதியில் அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் சட்டத்தரணிகள் விலகி இருப்பது.
கைது நடவடிக்கை: சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறையை கேட்டுக்கொள்ளுதல்.

கண்டனம்: உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தடுக்க சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கடும் அதிருப்தி தெரிவிப்பது.
இந்த விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் சுமார் 3,500 சட்டத்தரணிகள் கலந்துகொண்டதாகவும், இடவசதி குறைவினால் பலர் Zoom வழியாக இணைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.