Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

திங்கட்கிழமை முதல் கடவுச்சீட்டு விநியோகம் ஆரம்பம்.

.

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் கடவுச்சீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்தார்.

நேற்று (15)காலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அதனை தெரிவித்தார்.

இ-பாஸ்போர்ட் முறை தொடர்பான சட்ட சிக்கல்கள் குறித்தும் அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

இ-பாஸ்போர்ட் திட்டத்திற்கு ஒப்பந்தம் கோரப்படுவதை தடுக்கும் வகையில் தற்போது நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் நாங்கள் இந்த விடயத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று ஹேரத் மேலும் கூறினார்.

750,000 கடவுச்சீட்டுகள் வந்தாலும், இந்த இருப்பு விரைவில் தீர்ந்துவிடும் என்று அமைச்சர் நம்பிக்ரக வெளியிட்டார்.

மற்றொரு சாத்தியமான கடவுச்சீட்டு பற்றாக்குறையைத் தவிர்க்க, வழக்கமான கடவுச்சீட்டுகளுக்கான கொள்முதல் செயல்முறையைத் தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப கூடுதல் கடவுச்சீட்டுகளை ஒப்பந்தம் மூலம் இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஹேரத் குறிப்பிட்டார்.

பாஸ்போர்ட் வழங்குவதில் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்கவும், பொதுமக்களின் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யவும் அரசு முனைப்புடன் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.