யாழில் இயங்கு நிலைக்கு வரவுள்ள கடவுச்சீட்டு அலுவலகம்!
,

யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் இயங்கு நிலையை அடையக்கூடிய வகையில், யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த தை மாதம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி, யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் அமைக்கப்படும் என்ற அறிவித்தலை வழங்கியதோடு, கடவுச்சீட்டு அலுவலகத்துக்காக மாவட்டச் செயலகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தையும் அவர் பார்வையிட்டிருந்தார்.
அப்போது முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில் டவுச்சீட்டு அலுவலகத்தை அமைப்பதற்கான பணிகள் மிக விரைவாக இடம்பெற்று வருகின்றன.
தேவேளை யாழ்ப்பாணம் மாவட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடமையாற்ற, ‘ஒருநாள் சேவைக்கான வலைத்தள சேவைக்கு’ கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து போதியளவு விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை.
இதனால் தென்னிலங்கையில் இருந்து குறித்த சேவை வழங்குநர்கள் பெறப்படவுள்ளனர்.
மேலும் யாழ்ப்பாணம் மாவட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் தேவையான தமிழ் உத்தியோகத்தர்களை அரச திணைக்களங்களில் இருந்து தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை கொழும்பில் இருந்து வருகைதரும் விசேட குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.