Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மொட்டுக் கட்சியின் ஆதரவின்றி ரணில் போட்டியிட மாட்டார்

.

ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அணியில் இணைய மாட்டார்கள் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.

எனினும், தமது கட்சியின் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் ரணிலுக்கு ஆதரவு வழங்க கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ரணில் அணியுடன் இணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை.

எனினும், எதிர்வரும் எட்டாம் திகதி 35-40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித்துடன் இணைய தயாராக இருக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதா என்ற பிரச்சினையை தீர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறுகின்றோம்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு உங்களுடன் இணைந்து கொள்வதாகக் கூறி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காட்டிக் கொடுக்காதீர்கள்.

இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், அந்தக் கட்சி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் என்பதில் சாத்தியம் இல்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவைப் பெறத் தவறினால், அவர் போட்டியிடப் போவதில்லை.

அப்படியானால் பொன்சேகாவும், ராஜிதவும் செல்ல இடமில்லாமல் போய்விடும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.