Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஈக்வடாரின் எல் ஓரோ மச்சாலா சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 27 கைதிகள், நான்கு சிறை ஊழியர்கள் பலி ! 33 கைதிகள் காயம் !!

நிலைமை மோசமடைந்ததை அடுத்து சிறப்பு பொலிஸ் குழு சிறைக்குள் நுழைந்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது.

ஈக்வடாரின் எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலா சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு சிறை ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 33 கைதிகள் காயமடைந்துள்ளனர்.
சிறை அதிகாரிகளின் தகவலின்படி, சில கைதிகள் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மச்சாலா சிறையில் இருந்து சில கைதிகளை அருகிலுள்ள மாகாணத்தில் உள்ள புதிய உயர் பாதுகாப்பு சிறைக்கு மாற்றும் அரசுத் திட்டத்தை எதிர்த்து கைதிகள் எழுச்சி தொடங்கியதாக ஆரம்பக் கணக்குகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடந்தபோது சிறைச்சாலையின் உள்ளே இருந்து துப்பாக்கி பிரயோகங்கள், வெடிச்சத்தங்கள் மற்றும் உதவிக்குரல்கள் கேட்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

நிலைமை மோசமடைந்ததை அடுத்து சிறப்பு பொலிஸ் குழு சிறைக்குள் நுழைந்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது.
இது சிறைச்சாலைக்குள் உள்ள இரண்டு கும்பல்களுக்கு இடையேயான மோதலாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதற்கு முன்பாக கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இதே மச்சாலா சிறையில் நடைபெற்ற ஆயுதமேந்திய கிளர்ச்சியில் 13 கைதிகள் மற்றும் ஒரு சிறைக் காவலர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.