Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

சுதந்திரக் கட்சி மீண்டும் உயிர் பெற்று முன்னோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது கட்சிக்குள் எதுவித பிளவும் இல்லை! சந்திரிக்கா.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் மாநாடு நடைபெற்றது

சுதந்திர கட்சி மீண்டும் உயிர் பெற்றதாக கூறுகிறார் சந்திரிக்கா.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்குள் எதுவித பிளவும் இல்லையென கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அந்த கட்சியின் பிரதிநிதிகள் மாநாடு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நேற்று சனிக்கிழமை (01) நடைபெற்றது.

மாநாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே துமிந்த திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

“சுதந்திரக் கட்சியின் உதவியுடன் எமது தலைமையின் கீழ் ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் உயிர் பெற்று முன்னோக்கி செல்ல ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், இன்று ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெறவுள்ளது.

கட்சியின் பதில் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பங்குபற்றுதலுடன் கொழும்பு டாலி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் பிற்பகல் 02 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டமும் நடைபெறவுள்ளது.

அதற்காக அனைத்து மாவட்டங்களின் ஆசன அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் இணை அமைப்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த கூட்டங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இன்று இடம்பெறவுள்ள கூட்டங்கள் சட்டவிரோதமானதும் ஒழுக்கமற்றதுமான சந்திப்புகள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்