Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஹமாஸ் இயக்கத்தை வழிநடத்திய முக்கிய தலைவரை காணவில்லை: போரில் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்

.

காசா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தை வழிநடத்திய யாஹ்யா சின்வார் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காணாமல் போன அவரை கண்டுபிடிக்க இஸ்ரேலும் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாஹ்யா சின்வார் நீண்ட காலமாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான், ஹாரெட்ஸ், மாரிவ் மற்றும் வாலா போன்ற முக்கிய இஸ்ரேலிய ஒலிபரப்பாளர் மற்றும் IDF இராணுவ புலனாய்வு இயக்குநரகம் போன்ற செய்திகள் சின்வார் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளன.

ஆனால் அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக ஷின் பெட் நிறுவனம் நம்புவதாகவும் ஒரு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன.

தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின் கூற்றுப்படி, காசா பகுதியின் சுரங்கப்பாதையில் மறைந்திருந்த ஹமாஸ் தலைவர், அக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் உயிரிழந்திருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் சந்தேகிக்கின்றன.

சின்வார் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் பகுதிகளில் இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியுள்ளது, ஆனால் அவர் காயமடைந்தார் அல்லது கொல்லப்பட்டார் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகின்றது.