Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய நீதியை இப்போதுள்ள அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும்

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.இலஞ்ச ஊழல் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அல்ஜசீரா செய்தி சேவைக்கு வழங்கப்பட்ட நேர்காணல் மற்றும் அதில் முக்கியமாக பேசப்பட்ட பட்டலந்த விவகாரமும் தற்போது நாட்டில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இலஞ்ச ஊழல் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பினால் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் வெளியிடப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்தில் இந்த அமைப்பினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. 

இலஞ்ச ஊழல் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் அவரால் மகஜரும் கையளிக்கப்பட்டது.

மகஜரை கையளித்ததன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நாட்டை ஆட்சி செய்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அல்ஜசீரா நேர்காணலின்போது ஊடகவியலாளர் பட்டலந்த விவகாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆணைக்குழுவின் அறிக்கை எங்கு என வினவினார். பாராளுமன்றத்தில் எங்கு சமர்பிக்கப்பட்டது என வினவினார். அத்துடன் அந்த ஊடகவியலாளர் அந்த அறிக்கையை காண்பித்தார்.

இந்த சம்பவம் இடம்பெற்று பல வருடங்கள் கடந்துள்ள நிலையில் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவதற்கு இந்த விடயத்தை பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்டத்தை உருவாக்கவில்லை.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய நீதியை இப்போதுள்ள அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும். எனவே, இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எமது அமைப்பு உட்பட பல அமைப்புகள் கையொப்பமிட்டு கோரிக்கை விடுத்துள்ள மகஜர் ஒன்றை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைத்துள்ளோம் என்றார்.