Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் புலனாய்வுத்துறை மேலாளருமான விநாயகம் அவர்களின் இறுதிப்பயணம்.

பல பெருமிதமான தமிழர்களின் வெற்றியின் பின்னால் இருந்த புலனாய்வின் “பிதாமகனி்ற்கு” வீரவணக்கம்..

புலனாய்வுத்துறை மேலாளருமான கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி (விநாயகம்) அவர்களின் இறுதிப்பயணம்.
விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் புலனாய்வுத்துறை மேலாளருமான கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி (விநாயகம்) அவர்களின் இறுதிப்பயணம். இலங்கையில் இருசமபலமான இராணுவங்கள் இருக்கின்றன என்பதை சர்வதேசம் உட்பட இலங்கை அரசு ஏற்றுக்கொண்டு தமிழர்களை பேச்சுவார்த்தை மேடைக்கு அழைக்க காரணமான தாக்குதல் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீதான வெற்றித்தாக்குதல் ஆகும்.. இத்தாக்குதலின் மூளைகளில் ஒருவரான “விநாயகம்” அவர்கள் இன்று தனது இறுதிப்பயணத்தை மேற்கொள்கின்றார்.. உலகின் இராணுவமேதைகள் பு லி க ளின் பல தாக்குதல்களை வியப்புடன் பார்த்திருக்கின்றார்கள். எந்த ஒரு தேசத்தின் உதவியுமின்றி, வரலாற்றின் போர்ப்பாடங்களில் எங்குமே காணக்கிடைக்காத வகையிலான அவர்களின் வெற்றித்தாக்குதல்களும், அதன் முறைமைகளுமே அவர்களை இல்லாதொழிக்கவேண்டும் என்னும் சிந்தனையினை சர்வதேசத்திடம் உருவாக்கியது.. பல பெருமிதமான தமிழர்களின் வெற்றியின் பின்னால் இருந்த புலனாய்வின் “பிதாமகனி்ற்கு” வீரவணக்கம்..